Thursday 19 September 2013

மோடீ எனக்கு ஒரு டௌட்டூ

 
          மோடி பக்தர்கள் மோடி பல சாதனைகள் புரிந்தார் என்று பல ஆண்டுகளாக கூவி வருகிறார்கள்.
கரகாட்டக்காரனில் செந்திலும் கோவை சரளாவும் ஆடுவதை ஒருவர் கௌண்ட மணி காதுபட ஒருவர் புகழ்வாரே அதே போல தான் இந்த மோடி பக்தர்கள் அவரை பற்றி புகழ்வதும்

       அவர் சூப்பர் man மாதிரி உத்தர்கண்ட் நிலசரிவு,மழைப்பெருக்கு நிகழ்வில் பல ஆயிரம் குஜராத்திகளை ஒரே நாளில் காப்பாற்றிய சாதனையை சிலர் எப்படி என்று கேட்டதும் துண்டை காணோம்,துணிய காணோம் என்று ஓடிய கூட்டம் மற்ற விஷயங்களில் கேட்டாலும் அப்படி தான் ஓடும்


      குஜராத் 2002 கலவரங்களை விட்டு விடுவோம்




     அண்ணே எனக்கு ஒரு டௌட்டு

மக்கள் ஆதரவு,கட்சி ஆதரவு   இருப்பவர் தான் பிரதமர் பதவிக்கு முன் நிறுத்தனும்னு நம்ம ஆளுங்களே விட்டு தூண்டி விட்டு பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க இவ்வளோ டகால்டி வேலை பண்ணீங்களே
   நீங்க முதல்வர் ஆனது எப்படின்னே
  நாளை பாராளுமன்ற தேர்தலில் பா ஜ க வெற்றி பெற்று மோடி அண்ணே நீங்கள்  பிரதமர் ஆகிறீர்கள்  என்று வைத்து கொள்வோம்.ஒரு வருடத்திற்குள் திடீரென்று நீங்க  நீக்கப்பட்டு சுரேஷ் சோனி /ராம் மாதவ் என்று யாரவாது  பிரதமர் ஆனா அது தான் மக்கள் போட்ட வோட்டுக்கு மதிப்பா
 அது  போல முதல்வர் ஆனவர் தானே அண்ணே நீங்க
மக்கள் ஆட்சியை சிறிதும் மதிக்காத ஒரு கூட்டத்தின் முடிவால் நேரடியாக பதவியில் உட்காரவைக்கப்பட்டவர்  கட்சிக்காரகளின்,வெற்றி பெற்ற எம் எள் ஏக்களின்,மக்களின் நின் தேர்தலில் முன்னிறுத்தப்பட்டு வெற்றி பெற்று முதலவர் ஆன கேசுபாய் படேலுக்கு குழிபறித்து விட்டு முதல்வர் ஆனவர் ஆச்சே நீங்க
பல்கலைகழகத்தில் அடிப்படை தகுதி கூட இல்லாமல் நேரடியாக ஒரு துறையின் தலைவராக பல்கலைகழகத்தை தன இரும்பு பிடியில் வைத்திருந்த மனிதர்,மறைமுக குழுவின் தயவால் துறை தலைவரானவர் போல முதல்வர் ஆனவர் தானே நீங்க
  அதே போல உங்களை நீக்கி  விட்டு .சுரேஷ் சோனியை ஆக்கினால் நீங்கள் என்ன பண்ணுவீங்க அண்ணே



  
      ஆண் பெண் சதவீதத்தில் குஜராத்தில் குறைவாக இருந்த பெண்களின் எண்ணிக்கையை உங்களின்  12 ஆண்டு ஆட்சியில் மாற்றி விட்டீங்களா அண்ணே
   the state TN ruled by useless corrupt leaders performed very poorly and moved from 987 to 995

http://www.mapsofindia.com/census2011/female-sex-ratio.html


  ஆனா உங்க நல்லாட்சியில gujarat  which had a golden rule between 2001 and 2011 and a role model for others has performed outstandingly by reaching 918 from the 920 in 2001
  \
  எப்புடீன்னே இப்படி.உங்களால மட்டும் எப்படின்னே இவ்வளோ சாதனை புரிய முடியுது 


  மத்திய அரசு பணிகளில் நூத்துக்கு ஒன்று ,இரண்டு குஜராத்திகள் கூட இல்லாத நிலையில் இருந்து பத்து பேராவது சேரும் அளவிற்கு மாற்றிடிங்களா  அண்ணே 

  முன்னாள் ராணுவத்தினர் கூட்டத்தில் சும்மா பிச்சு உதறநீங்க.ராணுவத்தில் அதிகாரிகள் எண்ணிக்கையில் பல ஆயிரம் பற்றாக்குறை.அதை நீக்குவேன்.அதை களைய பாடுபடுவேன்.வலுவான தலைமை இருந்தால் அதை உடனே களைய முடியும் என்று.

  ஆனா 12 ஆண்டு ஆட்சியில இப்ப இருக்குற பற்றாக்குறை ஆளுங்கல்ல நூத்துல ஒருத்தர் கூட குஜராத்தை சேர்ந்தவங்களா இல்லையே அண்ணே.12 ஆண்டு ஆட்சி செய்ததுல என்னா கிழிச்சீங்க,இந்தியாவிலேயே பெரிய மாநிலங்களில் இருந்து மிக குறைவான ஆட்கள் ராணுவத்தில்,மத்திய அரசு பணிகளில் சேருவது குஜராத்தில் இருந்து தான் என்ற பெருமையை தக்க வெச்சுட்டு தானே இருக்கிறீர்கள் என்று கேட்டா என்ன சொல்லுவீங்க அண்ணே   



  இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் மருத்துவம் பார்த்து கொள்ள/படிக்க/வேலை செய்ய லட்சக்கணக்கில் ஓடி வரும் நிலைக்கு மாநிலத்தை மாற்றி விட்டீங்களா அண்ணே   (நம்ம சகோதரி ஆட்சி செய்கிற ஊழல் தமிழகத்திற்கு படிக்க,மருத்துவம் பார்க்க,வேலை பார்க்க வருபவர்களில் பத்தில் ஒரு பங்காவது எட்டி இருக்கீங்களா அண்ணே  )



  ஏன்னா செய்வேன் பார்.ஒலிம்பிசில் நூறு தங்கம்,நானூறு வெள்ளி வாங்கும் நிலைக்கு இந்தியா செல்ல வலிமையான தலைமை வேண்டும் என்று பேச்சுல அனல் பறக்குது
 ஆனா விளையாட்டு துறையில் குஜராத்திகள் உங்க  ஆட்சியில் ஓரளவிற்காவது முந்தைய நிலையை விட முன்னேறி இருக்கிறார்களா அண்ணே (தமாதூண்டு மாநிலம் மணிபூர்
தேசிய விளையாட்டு போட்டிகளில் 48 தங்கம்.நம்ம பெருமித பணக்கார சுயம்பு சுயமரியாதை கொண்ட குஜராத் மாநிலம் மொத்தமா ரெண்டு வெள்ளி )



 

மருத்துவர்,செவிலியர் ,பொறியாளர்,ஆசிரியர்கள் என யார் வேண்டுமானாலும் அதற்க்கு அடுத்த மாநிலங்களை நம்பி இருக்கும் நிலையில் இருந்து குஜராத் நம்ம 12 ஆண்டு பொற்கால வலிமையான ஆட்சியில் மாறி விட்டதா அண்ணே


பிரசவத்தின் போது தாய் இறப்பு ,ஒரு வயதுக்கு முன் குழந்தைகள் இறப்பு போன்றவற்றில் கேரளம்,தமிழகத்தின் அருகிலாவது  குஜராத் வந்து விட்டதா அண்ணே


  https://www.facebook.com/#!/photo.php?fbid=10151874077804828&set=a.497812629827.278402.722399827&type=1&theater&notif_t=comment_mention
 
ஊழல் தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிக்கிறார்கள் ,வேலை வாய்ப்பில் 1989 முதல் 30 சதவீதம் இருப்பதால் அதிக அளவில் இருக்கிறார்கள்,ஆண்களை விட பெண்கள் மருத்துவ மேற்படிப்பில் அதிக இடம் சேரும் நிலை என்று எல்லாம் பெருமை பீற்றி கொள்கிறார்கள்.நம்ம குஜராத்தில் பெண்கள் ஒரு இருவது சதவீத இடங்களையாவது பிடிக்கும் நிலை இருக்கிறதா அண்ணே 


   நம்ம ஆளுங்க பல வருஷமா அடிச்சு விட்ட பொய்யில ஒன்னு.உலக வங்கியில நாம் போட்ட பணம்.இந்த பொய்யை கூச்சமில்லாம பல வருஷமா சொல்றதுக்கு எப்படி அண்ணே பல ஆயிரம் பேரை தயார் செய்தீங்க 

 
சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த செய்தி SMS /ஈமெயில் /ப்ளாக் /அனைத்து விதமான மக்கள் தொடர்பு ஊடகங்கள் மூலம் மோடி ஆதரவாளர்களால் பல முறை பல லட்சம் பேருக்கு பரப்பட்டது
http://sudhanganin.blogspot.in/2011/03/blog-post_28.html
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது.
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது. இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்..
பத்து வருடத்திற்கு முன்பு குஜராத அரசு உலகவங்கியில் வாங்கிய கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.(ஆ.ராசா மதிப்பை விட கொஞ்சம் குறைவுதான் !)
இன்று..
கடனை திருப்பி செலுத்திவிட்டது. இப்போது அந்த அரசின் கையிருப்பது தொகை 1 லட்சம் கோடிகள்.
ஹி ஹி ஹி உண்மை நிலவரம் என்ன என்று பார்ப்போமா
http://www.indiatvnews.com/business/india/modi-s-gujarat-bears-the-third-highest-debt-burden-after-bengal–5216.html
Chief Minister Narendra Modi’s Gujarat government bears the third highest burden after West Bengal and Uttar Pradesh, says a media report.
While Gujarat’s actual debt was Rs 1,38,978 cr as on March 2012 and is projected to touch Rs 1.76 lakh crore in 2013-14, it is preceded by only two other states: West Bengal (Rs 1.92 lakh crore) and Uttar Pradesh (Rs 1.58 lakh crore), says the report


மது விலக்கு என்று குஜராத்தில் நீங்க அடிக்கிற கூத்தை இன்னும் எப்படி அண்ணே  இந்த உலகம் நம்புது.என்னமோ போங்க அண்ணே.உங்களுக்கு மச்சம்னா மச்சம்
http://www.indianexpress.com/news/gujarat-eases-liquor-norms-tourists-to-get-permit-on-arrival-at-airport/1122093/0

மது விலக்கு  மோசடி
பணம் இருப்பவன் மருத்துவ சான்றிதழ் வாங்கி பெர்மிட் வாங்கி குடிக்கலாம்
அண்டை மாநிலங்களின் அருகில் இருக்கும் ஊர்களில் வசிப்பவர்கள் அங்கு சென்று குடித்து விட்டு வரலாம்,ஊர் சுற்ற வருபவர்கள் குடிக்கலாம், அதற்காக விடுதிகளில் சாராயம் வைத்து இருக்கலாம்.
ஏழைகளுக்கு மட்டும் தான் குடிப்பது சிரமம் அவர்களுக்கு ஒரே வழி கள்ளசாராயம்.இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் கள்ள சாராயதினால் இறப்புகள்,கண்பார்வை போகுதல் அதிக அளவில் நடைபெற்ற மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று.
கள்ள சாராய சாவுகள் மிக அதிகம் என்பதால் நம்ம
 சங்க பரிவாரங்களின் வழக்கமான நாட்டாமை தீர்ப்பான மரண தண்டனை சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் கொண்டு வந்தீங்க .கொலை செய்றது நம்ம பரிவாரத்துக்கு சாப்பாடு மாதிரி.எவனையாவது வெட்டு,தூக்குல போடு என்று சொல்லலைனா நம்ம பரிவாரங்களுக்கு சோறு எறங்காதே


      கொள்கை ரீதியாக நாங்கள் மதுவை எங்கள் மண்ணில் ,எப்படி முட்டையை கூட ரயிலில் விடவில்லையோ அது போல அனுமதிக்க மாட்டோம் என்று சிலர் வாதிடுவதை பார்க்கும் பொது சிப்பு சிப்பா வருது.எப்படி மூளை சலவை செய்திருக்குது பாருங்க அண்ணே நம்ம பரிவாரம்

    .ஊர் சுற்ற வருபவனுக்கு சாராயம் குடிக்க/வாங்க பெர்மிட் வாங்க அரசாங்கம் குஜராத்திற்குள் வரும் போதே இரத்தின கம்பளம் விரித்து பெர்மிட் வழங்குகிறது.அதிக பணம் வசூலிக்கும் தங்கும் விடுதிகளில் சாராயம் தண்ணீராக ஓடலாம்.இந்த அழகில் மது விலக்கு எங்கள் உயிர்மூச்சு என்று நம்ம ஆளுங்க பெருமை பாடுறது,அதை பார்த்து பலரும் ஆஹா ஆஹா என்று புளகாங்கிதம் அடைவது என்னமோ போங்க அண்ணே
  
  உங்க சக்தியே சக்தி

    

  
   

1 comment: